Monday, April 17, 2006

எப்போதும்போலத்தான்...


ஒரு மாதிரிதான் வருகின்றன
எல்லா தொலைபேசி அழைப்புகளும்
விருப்பு வெறுப்புகள் எதுவுமின்றி...
பின்பு ஒரு பட்டன் அழுத்தலில்
நடந்தேறும் இணைப்பும் துண்டிப்பும்!
இணைந்திருந்தவை துண்டிக்கப்பட்டதாகவும்
துண்டிக்கப்பட்டவை இணைந்ததாகவும்
இணைப்பும் துண்டிப்புக்குமான
இடைவெளி நிரம்பும்!
அப்பாவுக்கு மண் என்றும்
அம்மாவுக்கு மண்ணெண்ணை என்றும்
அந்த இடைவெளியில் தீர்மானிக்கப்பட்டதுதான்
அகண்ட வீதி இடைவெளியாய் இருக்கக்கூடும்
காற்றில் கலந்து விடாவண்ணம்
மனிதச்சொல் சேகரித்து
மீண்டும், மீண்டும்
ஒரு மாதிரிதான் வருகின்றன
எல்லா தொலைபேசி அழைப்புகளும்!

Monday, April 10, 2006

ஒரு சொல் பொய்!










நீலமாய் வானம் உடைந்து விழுந்ததாய்
பார்த்தவர்கள் பேசிக்கொண்டார்கள்
அந்தத் துண்டுகள்
வானத்தினுடையதுதானென்றும்
அந்த நீலம்
மிகவும் பரிச்சயமானதென்பதுமாய்
அவர்களின் பேச்சு இருந்தது!
வானம் உடைந்து போனதாய்
அவர்கள் அழவும் செய்தனர்!
பின்பு வானம் குறித்தான
வழிப்போக்கன் பேச்சு
அவர்களை கோபம் கொள்ளச்செய்தது
வழிப்போக்கன் கேட்டான்:

1) வானம் நீலம் என்று யார் சொன்னது?
2) வானத்தின் உண்மையான இருப்பு என்ன?