சிலரோடு என் தனிமைகள்!
இன்னும் தொடருகின்றன
திருடு போகும் என்
தனிமைகளுக்கான தேடல்...
தீநாக்குகள் புசிக்குமுன்
அரைகுறையாய் விழித்திரையில்
சிறைப்படுத்தியதும்;
கபாலம் நொறுங்கியதில்
அலங்கோல தொடைச்சதை
அலங்காரத்திலும்;
வெந்தொழிந்தது குடல்தான்
வேறொன்றுமில்லை என்பதாய்
சலனமற்றிருந்ததுமான;
மூன்று முகங்களின் வளியற்ற வெளிகளில்
மீண்டும், மீண்டும்,
கரைந்து கொண்டேயிருக்கின்றன
என் தனிமைகள்!
1 Comments:
ஆழமான வரிகள், என் அறிவுக்கு எட்டவில்லை, விளக்கம் கிடைக்குமா!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home