Friday, February 18, 2005

அழிவதும் ஆவதும்...

அப்போதெல்லாம் அம்மாவின் தலை
யானைத் தோலை நினைவுபடுத்தியது!
புற்று என்று மருத்துவர் விளக்கினார்...
முட்டி பால் குடித்த முலையை
முதலில் அது அரிந்துகொண்டது!
கொஞ்சமும் நரைத்திராத மயிர்களை
கற்றையாய் பிடுங்கிக் கொண்டு
உயிருக்கு கொஞ்சம்
உத்திரவாதம் கொடுத்தது!
மிகமெதுவாய்தான்
கரைத்து... கரைத்து...
முழுவதுமாய் காலாவதியாக்கி
தீயிட்டு கொளுத்தச்சொன்னது!
என் அப்புறமான நிமிடங்களின்
நிகழ்வாக்கம் குறித்து
மொத்தமும் ரசனையிழக்கச்செய்தது!
பிறகு இன்னொரு
கவிதை எழுதவிக்க போய்விட்டது!
(திசைகள், பிப்ரவரி 2005)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home