Wednesday, February 16, 2005

உறக்கம் கொள்ளாத பொழுதுகளில்...

எதையெதையோ நினைத்துக்கொள்கிறான்
உறக்கம் கொள்ளாத பொழுதுகளில்...
ஆங்கிலப் படத்தின் பிதுங்கிய மார்புக்காரி
பழைய காதலியுடனான சில்மிசங்கள்
நண்பனின் காதலியோடு ஓடிப்போன
இன்னொரு நண்பன்
உடைந்த கண்ணாடி சில்லுகளில் தோன்றும்
தோட்டத்தின் பிம்பம்
பாம்பு கடித்ததாய் பகல் தூக்கக் கனவு
எதிர்காலத்தின் சூன்யம்
நிகழ்காலத்தின் விரக்தி
நெருக்கமாய் இன்னொரு மனிதனின் தேவை
இப்படியாய்...
மனைவியை இழந்துவிட்ட
அப்பாவின் நினைவுகளை
நெட்டித்தள்ளியபடியே!

1 Comments:

At Fri Feb 18, 10:22:00 PM 2005 , Anonymous Anonymous said...

கவிதை சிறப்பாக உள்ளது..

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home