Friday, February 18, 2005

காற்று போல...

உருவகப்படுத்தல் கொடுக்கும்
சௌகரியங்கள் எனக்கு பிடித்திருந்தன!
காற்று போல ஆனபட்சத்தில்....
குசலம் விசாரிக்க
அம்மாவிடம் போய்வர முடியும்...
மண்வாசம் நுகர
தோட்டம் வலம்வர முடியும்...
ஒருசேர
கோவில், பள்ளிவாசல், தேவாலய
தரிசனம் தேடிப்போக முடியும்....
காற்று போல இருக்கத்தான் ஆசை!
நிதர்சனத்தில்
காற்றடைத்த பையாய்...

1 Comments:

At Mon Feb 21, 05:34:00 AM 2005 , Anonymous Anonymous said...

காற்றுக்கு இல்லை வேலி..

ஆனால் இந்த காற்றடைத்த பைக்கு உள்ளதே,

உன்னால் நானும் தடைப்பட்டேன் என்று உள்ளே உள்ள காற்று விலகி சென்றால்,

இந்த பை வெறும் குப்பை..

கற்றே உனக்கே எத்தனை கருனை..

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home