Wednesday, February 16, 2005

மழைகணங்கள்

இன்றும் வரவில்லை
நேற்றும் அதற்கு முந்தினமும் கூட...
நாளையும் அதற்குப் பிறகும்
வருவதும் நிச்சயமில்லை!
இருந்தும் மனம் ஏங்கும்...
மழை நனைத்த வேளைகளில்
தலை துவட்டி அணைத்துக்கொள்ளும்
அம்மாவின் நினைவுகளுக்காக...

1 Comments:

At Fri Feb 18, 09:56:00 PM 2005 , Anonymous Anonymous said...

இனிய நினைவுகள்..

இன்று..

நினைவாய் நித்திரைப்பது ஏனோ..

கனவுக்கு கூட கருணை இல்லையே..

இதோ..

செயற்கை மழையோடு வந்துள்ளேன்..

தாயே..

நீ எங்கே..


கவிதை நன்று வாழ்த்துக்கள்

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home